Zool Ad Network

Sunday, March 3, 2013

தமிழ்நாடு - 1940

மக்களே...!!!

இந்த பதிவு 1940 சமயத்துல இருந்த தமிழ்நாடு பத்தினது. யாரோ ஒரு ஆங்கிலேயர் 1940ல இருந்த தமிழ்நாட்டு கிராமம் ஒன்னை அழகா படம் பிடிச்சி INSIDE INDIA (இந்தியாவிற்குள்) அப்படிங்கற பேர்ல ஆவணப்படுத்தியிருக்கார். 




அதிகாலையில் எழுந்து ரெடி ஆகி வேலைக்கு போற விவசாயிகள், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்பவர்கள், சிலை வடிக்கும் சிற்பி, கோவில், குளம், பிராமண அக்ரஹாரம், கோலம் போடறது, அங்க வர குடுகுடுப்பைக்காரர் இப்படி ஒன்னு ஒன்னும் பார்க்க கண்கோடி வேணும். உரல்ல நெல் குத்தறதையும், கோழிக்கு கூட தானியம் போட்டு வளர்க்கறதையும் அழகா சொல்லியிருக்கார். 

ஏர் ஓட்டறவங்க, வேர்க்கடலை செடி அறுவடை, நெற்கதிர் அடிக்கறவங்க, அதுலயும் மதுரை வீரன் நாடகம் ஒன்னும், எதோ ஒரு திருவிழா ஒன்னும் கூட பதிவாகி இருக்கு. திருவிழாவையும், ஜல்லிக்கட்டையும் பார்த்தா, அனேகமா மதுரைப்பக்கம் ஒரு கிராமமா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. சான்சே இல்லை. பார்த்து என்ஜாய் பண்ணுங்க.  
 

-- 
-- 
------ கோவம் நல்லது...! 
                 ******

No comments:

Post a Comment