Zool Ad Network

Friday, March 1, 2013

குழந்தைக்கு ஐந்து வயசு

மக்களே...!!!
 
நான் சமீபத்தில் பார்த்த விளம்பரம். மொதல்ல இது கொஞ்சம் வேடிக்கையா இருந்தாலும் இதுக்கு பின்னாடி இருக்கும் உண்மை நெஞ்சில் அறையக்கூடியது.


சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் ஒவ்வொரு வருசமும் தோராயமாக 20 லட்சம் குழந்தைகள் 5 வயசு ஆகறதுக்கு முன்னாடியே இறந்துபோறாங்க. காரணம் நுண்ணுயிர் தொற்று, அதன்மூலம் வயிற்றுப்போக்கு, காமாலை, மூளைக்காய்ச்சல் இதெல்லாம் தான். கொடுமை என்ன தெரியுமா? இதை தடுக்க அவங்க செய்யவேண்டியது எல்லாம் நல்ல முறையில் கை கால்களை கழுவி சுத்தப்படுத்தினாலே போதுமானது. ஆனா, சுத்தமா இருத்தல் பற்றிய போதிய அறிவும், விழிப்புணர்வும் இல்லாததாலே வருசத்துக்கு இத்தனை குழந்தைகள் செத்துபோறாங்க. 

                                                              (கை கழுவும் முறை பத்தின விளக்கப்படம்)

லைப்பாய் சோப்பு கம்பெனி இதை மக்களுக்கு உணர்த்தற மாதிரி சமீபத்தில் ஒரு விளம்பரப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தாங்க. அவங்க இதை செய்ததுக்கு அவங்க வியாபாரம் ஒரு காரணமா இருந்தாலும், அதுல சொல்லியிருக்கிற செய்தி மிக முக்கியமானது. இப்போ நாம செய்ய வேண்டியது நமக்கு தெரிஞ்ச பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இதை பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எல்லா குழந்தைகளும் 5 வயசை கடக்க உதவி செய்வோம். அவ்வளவே...!!!!!

2 comments:

  1. Kai kaluvuvathu siriya visayamaga irunthalum, athanul irukkum oru unmaiyai theriviththatharkku nandri!

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு நன்றி செல்வமுருகன்.
      தொடர்ந்து படிங்க. உங்க கருத்துக்களை தவறாம பின்னூட்டத்துல போடுங்க.

      Delete