Zool Ad Network

Tuesday, February 26, 2013

சூரியனை கண்டுபிடித்தவர்


டாக்டர். ஜோன்ஸ் எட்வர்ட் சால்க். கண்டிப்பா நாம இந்த பேரை கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனா, இவர் பல ஆயிரக்கணக்கான இல்லை இல்லை கோடிக்கணக்கான குழந்தைகளோட எதிர்காலத்தை முடங்கி போகாம பிரகாசமாக்கியவர். ஆச்சர்யமா இருக்கு இல்லை... சொல்றேன்.

இவரை ஜோன்ஸ் அப்படின்னு சொல்றேன். ஜோன்ஸ் பிறப்பால் அமெரிக்கர். நியூயார்க்ல யூத பெற்றோர்களுக்கு 1924 ல பிறந்தவர். அவ்வளவா வசதியில்லாத குடும்பம். ஆனாலும் அவரோட அப்பா அம்மா அவருக்கு நல்ல முறையில படிப்பை குடுக்கணும்ன்னு நெனச்சி நல்லா படிக்க வெச்சாங்க. நியூயார்க் மெடிக்கல் யுனிவர்சிட்டில டாக்டருக்கு படிச்சார். படிச்சது டாக்டருக்கா இருந்தாலும் ஒரு மருத்தவரா வேலை செய்ய இவருக்கு விருப்பம் இல்லை. மருத்துவ துறையில ஆராய்ச்சி செய்யவே விரும்பினார். 



1947 ஆம் வருஷம் பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில் ஆராய்ச்சியாளராக வேலை செய்ய சந்தர்ப்பம் கெடைச்சது. ஒரு நல்ல டீம் செட் பண்ணினார். அடுத்த ஏழு வருடம் கடுமையான உழைப்பு. இந்த டீம் கண்டுபுடிச்சது போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து. 1955 ஆம் வருஷம் இந்த டீம் தன்னோட முதல் தடுப்பு மருந்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தது. இவங்க இந்த மருந்தை அறிமுகம் செய்தப்போ இரண்டாம் உலகப்போர் முடிவடைந்திருந்த சமயம். உலகம் முழுக்க பஞ்சம், பசி, பட்டினி. சாப்பாட்டுக்கே தாளம் போட்டுட்டு இருந்தப்போ மருத்துவ வசதிகள் பத்தி சொல்லவே வேணாம். போலியோ தான் அப்போ உலகத்தையே உலுக்கிட்டு இருந்த கொடிய நோய். பாதிக்கப்பட்டவங்கள்ல 90 சதவிதம் பேர் குழந்தைகள்.  அமெரிக்க அரசாங்கம் படுவேகமா இந்த ஆராய்ச்சிய முடுக்கி விட்டு பணத்தை கொட்டிக்கொடுத்தது. அமெரிக்காவில் 1952 ஆம் வருஷம் தான் மிக மோசமான வருசமா குறிப்பிடபட்டிருக்கு. இந்த ஒரு வருசத்துல மட்டும் 58000 போலியோ கேஸ் பதிவானது. கிட்டத்தட்ட 3200 பேர் இறந்து போனாங்க. 22000 பேர் கால்கள் செயல் இழந்து நடக்க முடியாம போனாங்க. இந்த கணக்கெல்லாம் முறையா பதிவானது மட்டும். முறையா பதிவாகாத கேஸ்கள் இன்னும் பல ஆயிரம் இருக்கும். இவ்வளவு ஏன், அந்த வருஷம் அமெரிக்க ஜனாதிபதியா இருந்த ரூஸ்வெல்ட்க்கே போலியோ வந்திடுச்சி.

ஜோன்ஸ் அவங்களோட டீம் அறிமுகப்படுத்தின தடுப்பு மருந்து முதன் முதல்ல டெஸ்ட்டுக்கு வந்தப்போ  அது ஒரு நாடு தழுவிய புரோக்ராமா நடத்தப்பட்டது. 20000 டாக்டர் மற்றும் ஹெல்த் ஆபிசர்களும், 64000 பள்ளி கல்வி அதிகாரிகள், 1800000 பள்ளி மாணவர்கள், 220000 உதவியாளர்கள் என நாடு முழுதும் இதில் பங்கெடுத்துகிட்டாங்க. ஏப்ரல் மாசம் 12 ஆம் தேதி, 1955 ஆம் வருஷம் இந்த சோதனை வெற்றி பெற்றதா அறிவிக்கப்பட்டது. இந்த நாளை அமெரிக்கா தேசிய விடுமுறை நாள் போல கொண்டாடியது. டாக்டர் ஜோன்ஸ்  "miracle worker," அப்படின்னு கொண்டாடப்பட்டார். 




இதுக்கு அப்புறம் நடந்தது தான் சிறப்பு. ஏழு வருஷம் ராத்திரி பகலா கஷ்டப்பட்டு கண்டுபுடிச்ச தன்னோட மருந்துக்கு டாக்டர் ஜோன்ஸ் காப்புரிமை வாங்கல. வாங்க மறுத்திட்டார். அவர் மட்டும் காப்புரிமை வாங்கியிருந்தா இந்நேரம் அவரோட அடுத்த ஒரு 10-15 தலைமுறையே, இன்னும் அதுக்கும் மேலே பணத்தை குவிச்சிருப்பார். இன்னும் குவிச்சிட்டு இருந்திருப்பார். உலகம் முழுக்க இன்னும் இவரோட தடுப்பு மருந்தை தான் உபயோகப்படுத்தறாங்க. ஐபோன், ஐபேட் இதெல்லாம் கண்டுபுடிச்சி, அதுக்கு காப்புரிமை வாங்கி பணம் சம்பாதிச்சவங்களை எல்லாம் மேதைகள் என கொண்டாடும் நாம் இவர் பேரைக்கூட தெரிஞ்சி வெச்சிக்கல.

இந்த திட்டம் 1995, முதல் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 17 கோடி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளும் பயனடைந்துள்ளார்கள்.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் போலியோ அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் அந்த நிலை வருவது நம் கையில்தான் இருக்கிறது. - See more at: http://importantdays1000.blogspot.de/2011/09/world-polio-day-24.html#sthash.XXlYrlUy.dpuf
இந்தியாவில் உலக போலியோ நோய் தினம் அக்டோபர் 24 ஆம் தேதியும், போலியோ சொட்டு மருந்து தினம் வருடத்தின் ஆரம்ப மாதங்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திலும் இந்தியா முழுவதும் 1995 ஆம் வருடத்தில் இருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் போன வாரம் பிப்ரவரி 19 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 18 கோடி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அதாவது போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. இது முழுக்க முழுக்க டாக்டர். ஜோன்ஸ் அவர்களின் கருணை உள்ளத்தின் விளைவே.  
இந்த திட்டம் 1995, முதல் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 17 கோடி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளும் பயனடைந்துள்ளார்கள்.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் போலியோ அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் அந்த நிலை வருவது நம் கையில்தான் இருக்கிறது. - See more at: http://importantdays1000.blogspot.de/2011/09/world-polio-day-24.html#sthash.XXlYrlUy.dpuf


ஒருமுறை ஒரு பத்திரிகை பேட்டியில ஜோன்ஸ் கிட்ட நீங்க ஏன் உங்க மருத்துக்கு காப்புரிமை வாங்கல ன்னு கேள்வி கேட்டாங்களாம். அதுக்கு அவர் சொன்னது '' என்னோட மருந்து சூரியன் மாதிரி உலகத்துக்கே பயன்பட கூடியது. நம்மால சூரியனுக்கு எப்படி காப்புரிமை வாங்க முடியும்? '' அப்படின்னு கேட்டாராம். 

மேன்மக்கள் எப்பவும் மேன்மக்கள் தான்.

No comments:

Post a Comment