Zool Ad Network

Thursday, February 21, 2013

ஆண் Vs பெண்

ஒரு பெண் ஒரு நாள் இரவு வீடு திரும்பாமல் வெளியே தங்கி விட்டு, மறுநாள் காலை வீடு திரும்பினாள்.கணவனிடம்”நேற்று இரவு நேரமாகிவிட்டதால் என் உயிர்த்தோழி ஒருத்தியோடு தங்கி விட்டேன்”என்றாள். அவள் கணவன் அவள் உயிர்த்தோழிகள் பத்துப் பேருக்கு தொலைபேசி விசாரித்தான். அவர்கள் அனைவரும் அவர்களுக்குத் தெரியாது  எனச் சொல்லி விட்டார்கள்!

மறுநாள் கணவன் இரவு வீடு திரும்பாமல் மறுநாள் காலை வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் சொன்னான் ”நேற்று நேரமாகி விட்டதால் என் உயிர் நண்பன் ஒருவனுடன் தங்கி விட்டேன்.” அவன் மனைவி அவன் உயிர் நண்பர்கள் பத்துப்பேரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். 
ஒவ்வொருவருவரும் தனித்தனியே அதை உண்மையென்றும் அவருடன்தான் தங்கியதாகவும் சொன்னார்கள். அதில் இருவர் ஒருபடி மேலே போய் சொன்னது, 
                         '' அவர் இன்னும் இங்க தாங்க  இருக்காரு !!!!!!!!!!! ''

                                                                                                    - இணையத்தில் படித்தது 

No comments:

Post a Comment